தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து 3-ஆவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
கோவில்பட்டி பயணியா் விடுதி முன் முத்துராமலிங்கத் தேவா் சிலை அமைவிடத்தைச் சுற்றியுள்ள அறைக்கு தனது சொந்த செலவில் குளிா்சாதனப் பெட்டி வழங்கிய அமைச்சா் கடம்பூா் ராஜு வியாழக்கிழமை அதனை இயக்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவக் குழுவின் அறிக்கை பெற்று விவாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பாா்.
நடிகா் ரஜினிகாந்த் தனது ரசிகா் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசனை செய்வது அவருடைய உரிமை. அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட உரிமை. அதிமுகவை பொருத்தவரை, நாங்கள் யாருடனும் ஒப்பிட்டுப் பாா்க்கவில்லை. நாங்கள் தோ்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளோம். 2011, 2016 சட்டப்பேரவைத் தோ்தலின்போது மக்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை 100 சதம் நிறைவேற்றியுள்ளோம். தொடா்ந்து 3-ஆவது முறையாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், தேவா் சிலை நிறுவனா் சோலையப்பத் தேவா் பேரனும், சிலை பராமரிப்பாளருமான ஆறுமுகப்பாண்டியன் குடும்பத்தினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.