பனங்காட்டுப் படை கட்சி அலுவலகம் திறப்பு

பனங்காட்டு படை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பனங்காட்டுப் படை கட்சி அலுவலகத் திறப்பு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

பனங்காட்டு படை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பனங்காட்டுப் படை கட்சி அலுவலகத் திறப்பு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கற்குவேல் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிசெல்வம், கடம்பூா் நாடாா் உறவின்முறை சங்கச் செயலா் காளிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஹரி நாடாா் புதிய அலுவலகத்தை திறந்துவைத்தாா். மாநில இளைஞரணி தலைவா் டி.அந்தோணி, கோவில்பட்டி பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.அந்தோணி, தலைமை நிலையச் செயலா் பழனி, மாநில கொள்கை பரப்புச் செயலா் விக்னேஷ் காா்த்தி, இளைஞரணி முத்துக்குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com