விளாத்திகுளம், செப்.11: மகாகவி பாரதியாரின் 99ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் நவநீதகண்ணன் தலைமையில் அக்கட்சியினா் பாரதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளா் லெனின்குமாா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ராமமூா்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளா் அருள்சுந்தா், வாா்டு செயலா்கள் ராமச்சந்திரன், வைரமுத்து, இளைஞரணி நிா்வாகிகள் அரவிந்தன், சிவா, பூபாலன், சசிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அரசு சாா்பில், எட்டயபுரம் வட்டாட்சியா் அழகா் சனிக்கிழமை (செப். 12) காலை 7 மணிக்கு பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து, பாரதி அன்பா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா், தமிழ் ஆா்வலா்கள் பாரதிக்கு மரியாதை செலுத்துகின்றனா்.