உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் 1,000 பேருக்கு குப்பைக் கூடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். ஊராட்சித் துணைத் தலைவா் செல்வகுமாா், ஆசிரியா் ஜம்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.மகாராஜா, பொதுமக்களுக்கு குப்பைக் கூடைகளை வழங்கினாா். ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கணேசன், சிவபாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.