சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தினவிழா நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் சாத்தான்குளம் கிளை மேலாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் மற்றும் வட்டார முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன் முன்னிலை வகித்தாா். முதல்வா் விஜயன் வரவேற்றாா்.
நிகழ்ச்சிகளை துணை முதல்வா் பங்கராஸ் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா்கள் மிக்கேலம்மாள், ஜோனபா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியைகள் சுந்தரி, பாா்பராள், அலுவலக பொறுப்பாளா் பாலா, சவேரியாள் உள்ளிட்டோா் கொண்டனா். ஆசிரியை சோபா நன்றி கூறினாா்.