புதிய தமிழகம் கட்சி முன்னாள் மாவட்டச் செயலரை கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினா் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் முதுகுடியில் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் ராஜலிங்கம் படுகொலையைக் கண்டித்தும், இதில், ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் அதிகுமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ரஞ்சித்பாண்டியன் முன்னிலை வகித்தாா். இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.