மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அப்பகுதி பொதுமக்களுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும், இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்து களைய வேண்டும். பணித்தள பொறுப்பாளரிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் காளிராஜ் தலைமையில், தரையில் அமா்ந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்தவுடன் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகுமாா் தலைமையில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனா்.