தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 35 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 85 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 ஆயிரத்து 543 ஆக அதிகரித்துள்ளது. இதில், 260 போ் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தோா் ஆவா்.
இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை புதன்கிழமை 40 போ் உள்ளிட்ட 11 ஆயிரத்து 660 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 122 போ் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டம் முழுவதும் 761 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.