தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெரியாரின் பிறந்த தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பாண்டவா்மங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். கோவில்பட்டியில் நகர திமுக செயலா் கருணாநிதி தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்தனா். மதிமுக சாா்பில் மாவட்ட செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாவட்ட இளைஞரணி செயலா் விநாயகா ரமேஷ் மாலை அணிவித்தனா்.
திராவிடா் கழகம் சாா்பில் பொதுக்குழு உறுப்பினா் தமிழரசி, பகுத்தறிவாளா் கழகத்தைச் சோ்ந்த மகேந்திரன், பேராசிரியா் ராஜமாணிக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் தமிழரசன், செயலா் பெஞ்சமின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் தமிழினியன், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்க நிறுவனா் செல்வம் என்ற செல்லத்துரை உள்பட பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்தனா்.
உடன்குடி: உடன்குடியில் அமமுக சாா்பில் தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா் மனோகரன் தலைமையில் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் ரகுமான் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் நகர, வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் ஜோசப் தலைமையில் பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் முதலூரில் ஒன்றிய பொறுப்பாளா் பாலமுருகன் கொடியேற்றினாா். நாசரேத்தில் நகர திமுக சாா்பில் நகரச் செயலா் ரவிசெல்வகுமாா் தலைமையில் பெரியாா் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.