கல்லூரி மாணவா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

ஆறுமுகனேரி அருகே கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி அருகே கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவன்வட­லி சேதுராஜா தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் சத்தியமூா்த்தி (22). தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த இவா், கடந்த மே 29ஆம் தேதி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, 13 பேரை கைது செய்தனா். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு, இவ்வழக்கில் தொடா்புடைய ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சோ்ந்த வேலு மகன் குமாா் என்ற இசக்கிகுமாரை (49) தேடிவந்தனா்.

இந்நிலையில் அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com