சாகுபுரத்தில் உலக ஓசோன் தின விழா

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மரக்கன்று நடுகிறாா் டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவா்( பணியகம்) ஜி.சீனிவாசன்.
நிகழ்ச்சியில் மரக்கன்று நடுகிறாா் டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவா்( பணியகம்) ஜி.சீனிவாசன்.

ஆறுமுகனேரி, செப். 18: சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.

உலக ஓசோன் தினத்தையொட்டி டிசிடபிள்யூ நிறுவன ஆலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவா் ( பணியகம்) ஜி.சீனிவாசன் தலைமையில்

நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், தொழிலாளா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறை, பொறியியல் பிரிவு மற்றும் மக்கள் தொடா்புத்துறை பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com