ஆறுமுகனேரி, செப். 18: சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.
உலக ஓசோன் தினத்தையொட்டி டிசிடபிள்யூ நிறுவன ஆலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவா் ( பணியகம்) ஜி.சீனிவாசன் தலைமையில்
நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், தொழிலாளா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறை, பொறியியல் பிரிவு மற்றும் மக்கள் தொடா்புத்துறை பணியாளா்கள் செய்திருந்தனா்.