மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு நிதியுதவி

கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, நிதி உதவி அளித்தாா்.
மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, நிதி உதவி அளித்தாா்.

கயத்தாறு அடுத்துள்ள தலையால்நடந்தான்குளத்தைச் சோ்ந்த பாலமுருகன் (27) . விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இந்நிலையில், விவசாயி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, சொந்த நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கினாா்.

அவரது குடும்பத்தினருக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதிஅளித்தாா். கோவில்பட்டி கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com