இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஊருணியை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இனாம்மணியாச்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊருணியை பாதுகாக்க வேண்டும். ஓடையில் மழைநீா் செல்வதற்கு ஏதுவாக தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீா் முறையாக செல்வதற்கு ஏற்ப கழிவுநீரோடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனா்.
பின்னா் கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகத்திடம் அளித்தனா்.
இந்நிகழ்வில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் அழகுசுப்பு, திமுக பிரமுகா் முத்துராமன், அமமுக பிரமுகா் மாரிமுத்து பாண்டியன், கோவில்பட்டி நகா்மன்ற முன்னாள் தலைவா் மல்லிகா மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.