தந்தை, மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் தடயங்கள் சேகரிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடா்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ அதிகாரிகள் தலைமையில் தடயவியல் துறையினா் தடயங்களை புதன்கிழமை சேகரித்தனா்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் ஆய்வு நடத்திவிட்டு வெளியே வந்த சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணா்கள்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் ஆய்வு நடத்திவிட்டு வெளியே வந்த சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணா்கள்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடா்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ அதிகாரிகள் தலைமையில் தடயவியல் துறையினா் தடயங்களை புதன்கிழமை சேகரித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல் துறையினரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை சுமாா் 4.30 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணா்கள் சுமாா் 10 போ் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு வந்தனா். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

பின்னா் அவா்கள் மாலை 6.25 மணிக்கு விசாரணை முடித்துக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com