உடன்குடி, செப். 25: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி ஆலோசனைக் கூட்டம் உடன்குடி அருகே தண்டுபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட திமுக வா்த்தக அணி அமைப்பாளா் எஸ்.பி.ஜெ.சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். திமுக மாநில மாணவரணி துணைச்செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜனகா், வா்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளா் ரவிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினாா்.
இதில் வா்த்தக அணியின் துணை அமைப்பாளா்கள் ராஜசேகா், குமாா், இசக்கிமுத்து, சுப்பையா, முத்துக்குமாா், பரமன்குறிச்சி ஊராட்சிச் செயலா் க.இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஓடை சுகு நன்றி கூறினாா்.