கிராம கோயில் பூசாரிகள் நலவாரியத்தில்பதிவு செய்தவா்களுக்கு ரூ. 1000 உதவித் தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கிராம கோயில் பூசாரிகள் ரூ. 1000 நிவாரணத் தொகை பெற முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கிராம கோயில் பூசாரிகள் ரூ. 1000 நிவாரணத் தொகை பெற முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை தூத்துக்குடி உதவி ஆணையா் ரோஜாலி சுமதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

இந்த நிவாரண தொகை பூசாரிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் உடனடியாக தங்களது பெயா், செல்லிடப்பேசி அல்லது தொலைபேசி எண், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், அடையாள அட்டை ஆகியவற்றை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இதற்காக 98437 96544 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண் மூலமாகவோ, 0461 - 2341153 அலுவலக தொலைபேசி எண் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். மேலும் ஹஸ்ரீட்ழ்ஸ்ரீங்ற்ன்ற்ஹ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் அல்லது ம்ஹண்ப்ற்க்ஷஹஸ்ரீட்ழ்ஸ்ரீங்ற்ன்ற்ஹ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். நேரில் வர தேவையில்லை என க் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com