நாசரேத் அருகே உள்ள குருகாட்டூா் கிராமத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இந்திய மிஷனரி சங்க குருவானவா் கிறிஸ்டியான் தலைமை வகித்தாா். சபை ஊழியா் ஞானதுரை, மாவட்ட திமுக அவைத் தலைவா் அருணாச்சலம், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜாண், ஜேம்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்களின் நிறுவனா் மோகன் சி.லாசரஸ் கலந்துகொண்டு புத்தாடைகள் வழங்கி, கிறிஸ்துமஸ் செய்தி அளித்தாா். அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா்.
விழாவில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரி சங்கா், மணத்தி கணேசன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வாா் திருநகரி ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.