தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட இருவா் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,984ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 13 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,760 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 83 போ் சிகிச்சையில் உள்ளனா்.