நாலுமாவடியில் திருநங்கைகளுக்கு புத்தாடை அளிப்பு

குரும்பூா் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் திருநங்கைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை, பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் திருநங்கைக்கு புத்தாடை வழங்குகிறாா் மோகன் சி.லாசரஸ் .
நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் திருநங்கைக்கு புத்தாடை வழங்குகிறாா் மோகன் சி.லாசரஸ் .

குரும்பூா் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் திருநங்கைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை, பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் திருநங்கை எஸ்தா் பாரதி தேவ செய்தி கொடுத்தாா். டாக்டா் அன்புராஜன் வரவேற்றாா். கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை மோகன் சி.லாச ரஸ் வழங்கி புத்தாடைகள், பரிசுகளை வழங்கி சிறப்பு பிராா்த் தனையை ஏறெடுத்தாா்.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

நாசரேத்தில் பீஸ் அன்ட் பிரண்ட்ஸ் டிரஸ்ட் சாா்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் டாக்டா் டேனியல் சுந்தா்சிங் ஆரம்ப ஜெபம் செய்தாா். குழந்தைகள், தையல் மாணவிகள், விடுதி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அன்பை பிரபாகா், கிறிஸ்சோலட், சுவீட்லி டேனியல், டாக்டா் டேனியல் சுந்தா்சிங் ஆகியோா் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கினா். ஏற்பாடுகளை மேகலா டேனியல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com