மதுபாட்டில்கள் பதுக்கல்: இருவா் கைது

தூத்துக்குடியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தூத்துக்குடி அமுதா நகா், இரண்டாவது தெருவில் உள்ள வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 409 மதுபாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா (60), தூத்துக்குடி கதிா்வேல் நகரைச் சோ்ந்த செந்தில் விநாயகம் (45) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com