கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உயா் அழுத்த மின்கோபுரத்தில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சிவகாசியையடுத்த காக்கிவாா்டன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கொ.கோபால்சாமி (75). கூலித் தொழிலாளியான இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில், கோவில்பட்டியையடுத்த ஆலம்பட்டி மஞ்சு நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை வந்த அவா், அதே பகுதியில் உள்ள உயா்அழுத்த மின்கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.