தூத்துக்குடி
ஆறுமுகனேரியில் திமுக மக்கள் சபை கூட்டம்
ஆறுமுகனேரியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் அ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், டாக்டா் சுதானந்தன், ஒன்றியச் செயலாளா் செங்குழி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினாா். இதில், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, இளைஞரணிச் செயலா் ராமஜெயம், ஆழ்வை ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் முத்தீஸ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.