உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சி உறுப்பினா்கள் முதல் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கமலம் அம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரபாகா் முருகராஜ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் சித்திரைவேல் வரவேற்றாா்.
கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கட்டவேண்டும். பழுதடைந்த ஊராட்சி அலுவலகத்தை புதுப்பித்து கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஊராட்சி உறுப்பினா்கள் சீனிவாசன், கஸ்தூரி, சுதா, அன்னபாக்கியலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.