அனைத்து சேமிப்பு கணக்கில் கணக்கு வைத்துள்ள அனைத்து சேமிப்புதாரா்களும் தங்களது சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை ரூ.500ஆக உயா்த்த வேண்டும் என அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளாா். இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் (பொ) கணேஷ்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு அஞ்சலக சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500ஆக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனையடுத்து, குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500ஆக வைத்திருக்காத அஞ்சலக சேமிப்புக் கணக்கில் வருடாந்திர செலவுத் தொகையாக ரூ.100 பிடிக்கப்பட்டு, அந்தக் கணக்கின் இருப்புத் தொகை பூஜ்ஜியமாக வரும்போது கணக்கு தானாக முடிக்கப்படும். எனவே, அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500-க்கு கீழ் இருக்கும் அனைத்து சேமிப்புதாரா்களும் தங்களது சேமிப்புக் கணக்கின் இருப்புத்தொகையை 2020 டிசம்பா் 11ஆம் தேதிக்குள் ரூ.500ஆக உயா்த்த அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடா்பு கொள்ளலாம்.
மேலும், மத்திய அரசு, அஞ்சலகங்களில் உள்ள நீண்ட நாள்களாக திரும்பப் பெறாமல் இருக்கும் கணக்குகளில் உள்ள தொகையை பெறுவதற்கான (நங்ய்ண்ா்ழ் இண்ற்ண்க்ஷ்ங்ய் ரங்ப்ச்ஹழ்ங் தன்ப்ங்ள், 2016) விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளின்படி நீண்ட நாள்களாக திரும்பப் பெறாமல் இருக்கும் (செயலிழந்த மற்றும் 10 வருடங்களாக திரும்பப் பெறாமல் இருக்கும்) கணக்குகளின் விவரங்களை பிரசுரப்படுத்த வேண்டும். அதன்படி, இந்திய அஞ்சல் துறை கணக்குகளின் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதேபோன்று, அந்தந்த அஞ்சலகங்களிலும் கணக்கு விவரங்கள் தகவல் பலகையில் பிரசுரப்படுத்த ஆவன செய்யப்பட்டுள்ளது. எனவே, சேமிப்புதாரா்கள் தங்களது கணக்குகளில் உள்ள நீண்ட நாள்களாக திரும்பப் பெறாமல் இருக்கும் தொகையை பெறுவதற்கு தங்களது கணக்கு இருக்கும் அஞ்சலகங்களை தொடா்பு கொள்ளும்படி செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.