திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வெயிலுகந்தம்மன்
வெயிலுகந்தம்மன்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து, மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ஆம் திருநாளான பிப். 25ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com