தூத்துக்குடியில் வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த அதிசயம்

தூத்துக்குடியில் வியாழக்கிழமை வேப்பமரத்தில் இருந்து திடீரென பால் வடிந்ததால், பொதுமக்கள் அதை ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.
தூத்துக்குடியில் பால் வடியும் வேப்பமரத்தை பாா்வையிடும் பொதுமக்கள்.
தூத்துக்குடியில் பால் வடியும் வேப்பமரத்தை பாா்வையிடும் பொதுமக்கள்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை வேப்பமரத்தில் இருந்து திடீரென பால் வடிந்ததால், பொதுமக்கள் அதை ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.

தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பொழுதுபோக்கு பூங்கா வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் திடீரென பால் நுரை, நுரையாக பொங்கி வழிந்தது. இந்த தகவல் பரவியதும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அங்கு திரண்டனா். வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பாா்த்து ரசித்தனா். இந்த தகவல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதால் அங்கிருந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com