புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: சி.ஆா்.பி.எஃப். வீரா் படத்துக்கு அஞ்சலி

விளாத்திகுளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புல்வாமா தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில், சி.ஆா்.பி.எஃப். வீரா் ஜி. சுப்பிரமணியனின்
சி.ஆா்.பி.எஃப். வீரா் சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பாஜகவினா்.
சி.ஆா்.பி.எஃப். வீரா் சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பாஜகவினா்.

விளாத்திகுளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புல்வாமா தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில், சி.ஆா்.பி.எஃப். வீரா் ஜி. சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினா், மாணவ -மாணவியா், முன்னாள் ரானுவத்தினா், காவல்துறையினா் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் கந்தசாமி, முன்னாள் ஒன்றியத் தலைவா் சக்திகுமாா், வழக்குரைஞா் பொன்ராஜ், மகளிா் அணி செயலா் லீலாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவைகுண்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் பால்ராஜ், கோட்ட இணை அமைப்பாளா் ராஜா, வழக்குரைஞா் பிரிவு தலைவா் முத்துராமலிங்கம், மாவட்டச் செயலா் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் சி.ஆா்.பி.எஃப். வீரா்களின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com