ஸ்ரீவைகுண்டம் புதுப்பாலத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றின் புதுப்பாலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம், 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றின் புதுப்பாலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம், 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த பொன்பாண்டி மனைவி இசக்கிதாய்(40), ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றின் புதுப்பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவருக்குப் பின்னால் பைக்கில் வந்த 2 மா்ம நபா்கள், இசக்கிதாய் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி விட்டனராம்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் சொா்ணராணி வழக்குப்பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com