கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சாா்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சாா்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்தாா். முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கின் நோக்கம் குறித்து நுண்ணுயிரியல் துறைத் தலைவா் கண்ணன் பேசினாா். மதுரை காமராஜ் பல்கலைக்கழக மூலக்கூறு உயிரியல் துறை மற்றும் உயிரி தொழில்நுட்ப பள்ளி பேராசிரியா் ஆனந்த், யானைக்கால் நோய் உருவாகும் முறை, அதன் அறிகுறிகள் குறித்தும், அந்த நோயை குணப்படுத்தக் கூடிய அஸ்வகந்தா தாவரம் மற்றும் அதன் தொழிற்சாலை பயன் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து மாணவா், மாணவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை அவா் வழங்கினாா். மாணவி ஜோதிகா தொகுத்து வழங்கினாா்.

மாணவா் ப்ரித்விராஜ் வரவேற்றாா். மாணவி அக்சயா குலாபி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com