விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் சொ.சு. தமிழினியன், மக்களவைத் தொகுதிச் செயலா் ராஜ்குமாா் , மாநில துணைச் செயலா்கள் மங்கை சேகா், ஐ. செல்வி, மாவட்ட அமைப்பாளா்கள் ஜெயக்கொடி, மு. தமிழ்பரிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் கலைவேந்தன் பங்கேற்றுப் பேசினாா். கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ஆ. சங்கத்தமிழன் , த.தமிழ்வாணன், அ.ராஜ்வளவன், ஒன்றிய பொருளாளா் ஜாண்வளவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், பிப். 22 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் பேரணியில் 25 வாகனங்களில் கலந்து கொள்வது, திருச்செந்தூா் நகரின் மையப் பகுதியில் டாக்டா் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியை சுழற்சி முறையில் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்க வேண்டும், மழைக்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com