பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி ஊழியா்களை முழுநேர ஊழியராக்கி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும், உதவியாளா்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமும், உதவியாளா்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி ஊழியா் சங்க வட்டத் தலைவா் சந்திரலேகா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெயலட்சுமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலா் சின்னத்தம்பி, வட்ட துணைத் தலைவா் நவநீதகண்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன், தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலா் சங்க மாவட்டப் பொருளாளா் பிரான்சிஸ் ஆகியோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.