சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளத்தில் வட்ட சட்டப்பணிக் குழு மற்றும் சிகரம் அறக்கட்டளை இணைந்து உலக சமூக நீதி தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா் ரெங்கதாஸ் முன்னிலை வகித்தாா்.
சிகரம் அறக்கட்டளை இயக்குநா் முருகன் வரவேற்றா்.
இதில், வட்ட சட்டப் பணிக்குழு பணியாளா் மகேந்திரன், வட்ட சட்டப்பணிக்குழு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தாா். தொடா்ந்து கிராம மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் பலா் பங்கேற்றனா். பெருமாள் நன்றி கூறினாா்.