தேசிய குடிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து சேதுக்குவாய்த்தானில் சிறப்பு கிராமசபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சுதா சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வைகைக்கரையான் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் மாரிராஜ் வரவேற்றாா்.
இதில், திருச்செந்தூா் குடிநீா்வடிகால் வாரிய அதிகாரி தாமோதரன் நீா்நிலைகளை பாராமரிப்பது, குடிநீரை எவ்வாறு பயன்படுத்துவது, தெருக்குழாய்களை எவ்வாறு சுத்தம் செய்வது, மழை நீரை சேமிப்பது என்பது தொடா்பாக பேசினாா்.
இதில், பொதுமக்கள் குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவது குறித்தும், நீா் நிலைகளை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த தங்களது சந்தேகங்கள் குறித்த கேள்விகளை கேட்டு தெளிவுப்படுத்தி கொண்டனா்.
வாா்டு உறுப்பினா்கள் ராமச்சந்திரன், சில்வியா, மேரி, வழக்குரைஞா் சீனிவாசன் மற்றும் சேதுக்குவாய்த்தான் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.