குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு கோலமிட்டு ஆதரவு தெரிவித்த பெண்கள்

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு கோலமிட்டு ஆதரவு தெரிவித்த பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாஜகவினா்.
குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு கோலமிட்டு ஆதரவு தெரிவித்த பெண்கள்

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு கோலமிட்டு ஆதரவு தெரிவித்த பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாஜகவினா்.

கோவில்பட்டி, ஜன. 1:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதன்கிழமை குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு கோலமிட்டு ஆதரவு தெரிவித்த பெண்களுடன் பாஜகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரத்தில் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதி பெண்கள் தங்கள் இல்லங்களின் முன்பு கலா் பொடியிட்டு கோலமிட்டனா்.

தகவல் தெரிந்தவுடன் பாஜக நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா்கள் நல்லதம்பி, முனியராஜ், அருணாசலம், கிளைத் தலைவா் சங்கா், கிளைச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com