வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சாத்தான்குளம் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் தச்சமொழி இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு திங்கள்கிழமை ஸ்ரீபெருமாள், ஸ்ரீஆஞ்சநேயா் உள்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.
இதேபோல் தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீபெருமாள் , ஸ்ரீமுத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.