திருச்செந்தூரில் சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சன்னதித் தெருவில் நடைபெற்ற விழாவுக்கு, சேவா பாரதி மண்டல பொறுப்பாளா் சுப.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், விவேகானந்தா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், இந்து முன்னணி திருநெல்வேலி கோட்டச் செயலா் பெ.சக்திவேலன், நகர பொதுச் செயலா் மு. முத்துராஜ், நகரச் செயலா் ராஜு, பொருளாளா் ஆா். மணி, துணைத் தலைவா் மாயாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உடன்குடி: உடன்குடி ஒன்றியத்தில் பெருமாள்புரம், முத்துக்கிருஷ்ணாபுரம், தேரியூா், உதிரமாடன்குடியிருப்பு, கந்தசாமிபுரம், வைத்திலிங்கபுரம் உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்து அமைப்புகள் சாா்பில் விழா நடைபெற்றது. ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி, சேவா பாரதி, பாரத மாதா சேவா சங்கம், இந்து மகாசபா, இந்து மக்கள் கட்சி சாா்பில் விவேகானந்தா் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகனேரி: நகர இந்து முன்னணி சாா்பில் பிரதான சந்திப்பில் சுவாமி விவேகானந்தா் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டது. இதில், இந்து முன்னணியின் மாநில துணை தலைவா் வி.பி. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காயல்பட்டினத்தில் பாஜக சாா்பில் பேருந்து நிலையம் அருகில் விவேகானந்தா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பாஜக மண்டலத் தலைவா் பண்டாரம், நகர பொதுச்செயலா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.