திருச்செந்தூா் ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வன்னிமாநகரம் நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா். இதில், திருச்செந்தூா் தொகுதி முன்னாள்
அதிமுக செயலா் எஸ்.வடமலைப்பாண்டியன், ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன், ஆறுமுகனேரி நகரச் செயலா் அரசகுரு, சுதா்சன் வடமலைபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.