கோவில்பட்டியில் பொங்கல் பண்டிகையை பாா்வையிழந்தோா், மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செண்பகமலா் பாா்வையற்றோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளை துணைத் தலைவா் செண்பகராமன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியா் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் வி.எம்.லட்சுமணப்பெருமாள், பாா்வையிழந்தோா், மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினாா். இதில், அறக்கட்டளை கௌரவத் தலைவா் முனியசாமி, பிராமண மகா சபை பொருளாளா் சங்கரன், அறக்கட்டளை ஆலோசகா் சிவன் செண்பகராமய்யா் உள்ட பலா் கலந்து கொண்டனா்.