குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்தில் ஆறுமுகம் நினைவுப் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தாளாளா் ராதா ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற வங்கி அலுவலா் வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவி சொா்ணப்பிரியா பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
தொடா்ந்து,கோலமிடுதல், உறியடித்தல், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமையாசிரியா் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றாா்.