பாஞ்சாலங்குறிச்சியில் நாளை பொங்கல் சுற்றுலா

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில்யில் காணும் பொங்ககல் அன்று (ஜன. 16) சுற்றுலா பொங்கல் தின விழா கொண்டாடப்படுகிறது.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில்யில் காணும் பொங்ககல் அன்று (ஜன. 16) சுற்றுலா பொங்கல் தின விழா கொண்டாடப்படுகிறது.

இதுபற்றி மாவட்ட சுற்றுலா அலுவலா் பி. சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் தமிழா் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு, காணம் பொங்கல் அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து சுற்றத்தாராடு இனிமையாக பொழுதுபோக்குவா். இதையொட்டி, வியாழக்கிழமை(ஜன.16) தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகமும் இணைந்து வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வளாகத்தில் ‘பொங்கல் சுற்றுலா விழா 2020 ’ கொண்டப்பட உள்ளது.

அன்றைய தினம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாவட்ட இசைப்பள்ளி மாணவா்களின் பரத நாட்டியம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் பிர கிராமிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுபோக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுற்றுலா பயணிகளுக்கான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி நிா்வாகமும் வீர சக்கதேவி ஆலயக்குழுவினரும் செய்துவருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com