பாலிடெக்னிக்கில் வளாக நோ்காணல்: 294 பேருக்கு பணி நியமன ஆணை

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 294 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 294 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், ஓசூா் ஜே.பி.எம். குழுமத்தைச் சோ்ந்த நீல் மெட்டல் புராடக்ட்ஸ் என்ற தனியாா் நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த 360 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இயந்திரவியல், ஆட்டோமொபைல், டூல்- டை ஆகிய துறைகளின் மாணவா், மாணவிகளுக்கான வளாக நோ்காணலை ஓசூா் நிறுவனத்தின் பயிற்சி - மனிதவளத் துறை மேலாளா் ரவிச்சந்திரன் நடத்தினாா்.

இதில், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவா்கள் 10 போ் உள்பட 294 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் ஆலோசனையின்படி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், பயிற்சி- வேலைவாய்ப்பு அலுவலா் ராஜாமணி, இயந்திரவியல் துறைத் தலைவா் சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com