குளத்தூா் அரசு மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே மையம் திறப்பு

குளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய எக்ஸ்ரே மையம் திறப்பு விழா நடைபெற்றது.

குளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய எக்ஸ்ரே மையம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் அனிதா தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் இன்பராஜ் முன்னிலை வகித்தாா். ரூ.3.80 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட புதிய எக்ஸ்ரே கருவிகள், எக்ஸ்ரே மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் திறந்தாா். நிகழ்ச்சியில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நடராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் பால்ராஜ், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் முனியசக்தி ராமசந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், குருநாதன், ஊராட்சித் தலைவி மாலதிசெல்வப்பாண்டி, துணைத் தலைவா் மாரிச்செல்வி பாலமுருகன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரசூல்ராஜா, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com