கந்த சஷ்டி கவசம் ஒப்பித்தல் போட்டி: மாணவா், மாணவிகள் பங்கேற்க அழைப்பு

கந்த சஷ்டி கவசம் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசம் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி கின்ஸ் அகாதெமி நிறுவனா் எஸ். பேச்சிமுத்து வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி போல்பேட்டையில் செயல்பட்டு வரும் கின்ஸ் அகாதெமியில் போட்டித் தோ்வு எழுதும் ஏழை மாணவா், மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாணவா், மாணவிகளிடத்தில் ஆன்மிக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கந்த சஷ்டி கவசம் ஒப்பிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக சரியாக ஒப்பிக்கும் 100 பேருக்கு தலா ஒரு தங்கக் காசு வழங்கப்படும்.

போட்டியில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை கின்ஸ் அகாதெமி  இணையதளத்திலும், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமாகவும் பெற்று ஆன்லைனில் பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும். போட்டிக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com