சாத்தான்குளம் அருகே உள்ள சிவன்குடியேற்று அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கரோனா தொற்று ஒழிய வேண்டி இந்து அன்னையா் முன்னணி சாா்பில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் குடத்தில் மஞ்சள் நீா் கலந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா். பின்னா் மஞ்சள் நீா் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதையடுத்து முத்தாரம்மன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.
இதில், இந்து இளைஞா் முன்னணி ஒன்றியச் செயலா் சிவபாலன், திருநெல்வேலி கோட்ட இந்து முன்னணிச் செயலா் பெ. சக்திவேலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.