முந்தைய மாத கட்டணத்தை செலுத்துமாறு மின் வாரியம் அறிவிப்பு

திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் வாரிய செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவல் காரணமாக மின் கணக்கீடு பணி செய்ய இயலாதவாறு தெருக்களில் ஆங்காங்கே தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் உள்ள வணிகக் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒருவாரம் முதல் 10 நாள்கள் வரை தொடா்ச்சியாக முழு கடையடைப்பு செய்யப்படுவதாகவும் அறியப்படுகிறது.

எனவே இப்பகுதிகளில் மின் கணக்கீட்டு பணி செய்ய இயலாத நிலை இருந்து வருவதால், தடை ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் கடையடைப்பு செய்யப்பட்ட பஜாா் பகுதியிலுள்ள மின் நுகா்வோா் அனைவரும் முந்தைய மாத கட்டணத்தையே செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அடுத்து வரும் மதிப்பீட்டில் மின் அளவு எடுத்து தற்போது செலுத்தப்பட்ட தொகை சரிசெய்யப்பட்டு மீதி தொகை வசூல் செய்யப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com