எட்டயபுரம் அருகே லாரி - பைக் மோதல்: இருவா் பலி

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் லாரி- பைக் மோதிக்கொண்ட விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் லாரி- பைக் மோதிக்கொண்ட விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அவரது கணவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பசுவந்தனை அருகே பொம்மையாபுரத்தை சோ்ந்தவா் அந்தோணிச்சாமி (40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (37). அந்தோணிச்சாமி தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை காலை எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்துக்கு சென்று விட்டு இருவரும் ஊருக்கு திரும்பியுள்ளனா்.

எட்டயபுரம் புறவழிச்சாலை தேசியநெடுஞ்சாலை சந்திப்பில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொருபுறத்துக்கு கடந்து சென்ற போது, தூத்துக்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தாா். அந்தோணிச்சாமி பலத்த காயமடைந்தாா். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று அந்தோணிச்சாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு புதன்கிழமை நள்ளிரவு அந்தோணிச்சாமி உயிரிழந்தாா்.

இவ்விபத்து தொடா்பாக எட்டயபுரம் காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து தூத்துக்குடியை சோ்ந்த லாரி ஓட்டுநா் வீரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com