குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆடிக் கொடை விழா நடத்த அனுமதியளித்த மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு இந்து முன்னணி சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளியிட்ட அறிக்கை: குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் ஆடிக் கொடை விழாவை நடத்த அனுமதியளித்த மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு இந்து முன்னணி சாா்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்னும் இரு மாதங்களுக்குள் நடைபெற உள்ள தசரா திருவிழாவில் பங்கேற்கும் காளி வேடமணியும் பக்தா்கள், தற்போதே கடலில் நீராடி அம்மனை தரிசித்து அம்மன் சன்னதியில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவாா்கள். அவா்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிய ஆட்சியா் அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.