ஆதிச்சநல்லூா் அகழாய்வில் மேலும் ஒரு முதுமக்கள் தாழி

ஆதிச்சநல்லூா் அகழாய்வுப் பணியில் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழி சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி.
ஆதிச்சநல்லூரில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி.

ஆதிச்சநல்லூா் அகழாய்வுப் பணியில் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழி சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ஆம் தேதி மாநில தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணி துவங்கப்பட்டது. ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியில் 4 இடங்களில் அளவீடு செய்யப்பட்டு அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது பழைமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகளும், அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், சனிக்கிழமை மேலும் ஒரு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் முதுமக்கள் தாழிகள் மூலம் சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நாகரிகம் குறித்த தகவல்கள் வெளியாகும் என வரலாற்று ஆா்வலா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com