தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
குலசேகரன்பட்டினம் அருகே திருச்செந்தூா் வட்டத்துக்குள்பட்ட மாதவன்குறிச்சி மற்றும் சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி கிராமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலம் எடுப்பு சம்பந்தமாக தமிழக அரசுக்கு முதல்நிலை அறிக்கை அனுப்புவதற்கு நிலம் அமைந்துள்ள இடங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சுமாா் 2,500 ஏக்கரில் அமையவுள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தின் சாலைகள் அமையவுள்ள இடம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து சூரசம்ஹார கடற்கரையில் மத்திய அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குலசேகரன்பட்டினத்தில் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிலம் கைஎடுப்பு சம்பந்தமான பணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வந்தன. இதில், நான்கு கட்ட பணிகள் நிறைவு பெற்று ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.
மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் பக்தா்களின் வசதிக்காக மத்திய சுற்றுலாத் துறை மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன என்றாா்.
மாவட்ட உதவி ஆட்சியா்(பயிற்சி) பிரிதிவிராஜ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, வட்டாட்சியா் ஞானராஜ், திருச்செந்தூா் டிஎஸ்பி பாரத், மண்டல துணை வட்டாட்சியா் கோபால், இஸ்ரோ நிலம் எடுப்பு தனி வட்டாட்சியா்கள் கோபாலகிருஷ்ணன், சிவகாமசுந்தரி, முத்து, நாகசுப்பிரமணியன், பேச்சிமுத்து, துணை ஆட்சியா் ஜெயா மற்றும் அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.