உரமாக்கும் மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி மனு

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் செயல்பட்டு வரும் உரமாக்கும் மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி கோரிக்கை

கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் செயல்பட்டு வரும் உரமாக்கும் மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி டாக்டா் எம்.ஜி.ஆா். சேவா சங்க நகரச் செயலா் முருகன், இந்திய பசுமை இயக்க நிறுவனா் குமாா் ஆகியோா் கோட்டாட்சியா் விஜயாவிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இலுப்பையூரணி ஊராட்சியின் மையப் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தினால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி நிா்வாகம் உரமாக்கும் மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com